Next  

Next  

  • கல்யாணக்காரி மேல் மையலுற்றுக் கவிதைகள் எழுதிய பாவம்

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து- அவனை ஏனோ பிடித்துப் போனது. நானூறு வருஷமாக அவரிடம் யாரும் உதவி என்று கேட்டதில்லை. இன்றைக்கு இந்த மனுஷன் அவரைப் பாதிரியார் ஆக்கியிருக்கிறான்.  அலமாரியில் கடற்படை மேலதிகாரியின் சலவை உடுப்புகள் கிட்டாமல் எதையோ அணிந்து வந்திருப்பதால், அவருக்கே தான் யாரென்று குழம்புகிறது. நேரம் வேறே விரைந்து கொண்டிருக்கிறது. அவர் மறுபடி உறங்கப் போக வேண்டும்.   சொல்லலாமா? அவன் கேட்டான்.   முதல்லே உன் பேரைச் சொல்லு....

  • நானூறு வருடம் முன் இருந்தவரும், லத்தீனும்

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நூல். அதிலிருந்து – அவன் இந்திய பாணியில் இரு கரம் கூப்பிக் கும்பிட்டுக் கேட்டான் –   துரையவர்கள் யாருன்னு புலப்படலே.  அமேயர் பாதிரியாருக்கு உறவா?   பாதிரியாருக்கு எப்படி உறவு இருக்க முடியும்?   மன்னிக்கணும்.   அதைச் சொல்லியாச்சு.   ஆமா, ஆனா உங்க கிட்டே சொல்லலே. கொச்சு தெரிசா கிட்டே சொன்னேன்.   நான் கேட்டதாலே, என்கிட்டே சொன்னதாகவும் அர்த்தமாகும்.  ...

  • நானூறு வருடம் பழையது, எனவே புனிதமானது

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ – ஆல்பர்ட் பிரபு கம்பீரமும், பொறுப்பும் கருணையும் இடைகலந்த குரலில் சத்தம் தாழ்த்தி அவனிடம் சொன்னார் –   நான் கொச்சு தெரிசா இல்லை. லார்ட் ஆல்பர்ட். நானூறு வருஷமா உலவறேன். இது என் வீடு.   அப்போது அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் சொன்னது –   நல்லது. நீங்க எனக்கு பாவமன்னிப்பு...

  • வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் இது. நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி கீழே தொடர்கிறது- மூன்றில் ஒருத்தர் பிரஞ்சுக் காரர் இல்லையோ? மிகச் சரிதான். பிரஞ்சுக் காரர்களுக்கும் காலம் காலமாக இங்கிலாந்து பேரரசு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து, இங்கிலீஷ் பண்பாட்டைப் போதித்து வருகிறது. சதா பெண்களோடு சிருங்காரம் பாராட்டுவதிலும், கெட்டுப் போன ஒயினும், முந்தாநாள் சாப்பிட்ட மீனும் உலர்ந்து துர்வாடை அடிக்கும் அவர்களின் வாய்க்குள் நாவு நுழைத்து முத்தம்...

  • ஆல்பர்ட் கோமகன் நடு இரவில் அருளி நடந்தது-வைதிகர்கள் வாழ்த்தப்படட்டும்

    வாழ்ந்து போதீரே – அரசூர் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ- கூடத்தில் சரவிளக்கு பாதிக்கு மட்டும் வெளிச்சம் வர எரிந்து கொண்டிருந்தது. ஆல்பர்ட் பிரபு தினசரி மிடுக்காக நடந்து வலது புறம் திரும்பும் இடத்தில் போட்டு வைத்த பெரிய மர மேஜையைச் சுற்றி மூன்று வேலைப்பாடமைந்த நாற்காலிகள்.   மேஜையும் நாற்காலிகளும் ஆல்பர்ட் பிரபு காலத்து மரவேலைப் பொருட்கள் போல் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய சந்ததியினர் வாங்கி வைத்திருக்கலாம்.   குடியும்,...