Archive For The “பொது” Category

ஆண்ட்ரு லயிட் வெப்பரும் ஏ.ஆர் ரஹ்மானும்

By |

ஆண்ட்ரு லயிட் வெப்பரும் ஏ.ஆர் ரஹ்மானும்

i இந்த வாரம் வெளியான என் அல்புனைவு கட்டுரைத் தொகுதி ‘எடின்பரோ குறிப்புகள்’ நூலில் இருந்து ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரும் ஓபராவும் இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரின் இசை முயற்சிகள் எல்லாமே பெரிய தோதில் இசையமைப்பும், பிரம்மாண்டமான கட்டமைப்பும் கூடியவை. ஏ.ஆர். ரெஹ்மானின் கூட்டுறவில் அவர் உருவாக்கி இரண்டு வருடம் முன்னால் சக்கைப்போடு போட்ட ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பாலிவுட் திரைப்படப் பாதிப்பில் உருவான ம்யூசிக்கல் ஆன மும்பைக்…




Read more »

மினிமலிஸ கடவுள் யஷ்வந்த்ராவ்

By |

மினிமலிஸ கடவுள் யஷ்வந்த்ராவ்

மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை இலக்கியப் பங்களிப்பு சிறப்பானது. கொலட்கரின் ‘ஜெஜூரி’ (ஆங்கில) ’ கவிதை தொகுப்பில் இருந்து- ————————————————————– யஷ்வந்த்ராவ் ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும். பெயர் யஷ்வந்த் ராவ். அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர். அடுத்த முறை ஜெஜூரி போகும்போது அவசியம் பார்த்துவிட்டு வாருங்கள். ரெண்டாம் தரக் கடவுள்தான் அவர். இருப்பது கோவிலுக்கு, கோவில் மதிலுக்குக்…




Read more »

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா

By |

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா

மகளிர் தின வாழ்த்துகள். ‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். ————————————————————————- 5 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 20, திங்கள்கிழமை ஒரு ரெண்டு நிமிசம் தாமதமா வந்ததுக்கு இந்த கூச்சல் போடுறிங்களே எத்தனை நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஏழு எட்டுன்னு நேரத்தைப் பாக்காம வேலை பார்த்திருக்கேன். அதுக்கு என்ன தனியாவா அதிகக் கூலி போட்டுக் கொடுத்தீரு? இப்படி அவன் (கரும்புத் தோட்டத் தொழிலாளி) கேட்க (கங்காணியான)…




Read more »

மிளகு பெருநாவல் தடத்தில்

By |

மிளகு பெருநாவல்  தடத்தில்

நீண்ட எண்பத்தெட்டு அத்தியாயங்களோடு பெருநாவல் மிளகு 2021 ஜூன் முதல் 2025 ஃபெப்ருவரி வரை சொல்வனம் இணைய இதழில் சீராக வெளியாகிப் பின்கதையோடு இந்த வாரம் நல்ல வண்ணம் நிறைவடைந்தது, இந்த நாவல் எழுதிக் கொண்டிருக்கும் போதே சொல்வனம் இணைய இதழில் பிரசுரமாக நண்பர் பாஸ்டன் பாலா முன்கை எடுத்தது சிறப்பாக இருந்தது. எண்பத்தெட்டு அத்தியாயங்களை இரண்டிரண்டு அத்தியாயம் ஒரு மின்கோப்பாக வடிவமைத்து – நாற்பத்திநான்கு கோப்புகள் – நான் ஒவ்வொன்றாக அனுப்பி வைப்பேன். அனுப்பிய பிறகு…




Read more »

திருச்சீரலைவாய் சாப்பாட்டுக் கடை

By |

திருச்சீரலைவாய் சாப்பாட்டுக் கடை

(அசோக்நகரில் வசித்த போது எழுதியது) திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1 மறதி குறித்த மனக் குமைச்சலோடு வார இறுதிக் காலை விடிந்தது. வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு வாக்குத் தத்தம் செய்தபடி ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன் இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும் ஊறுகாயாவதாய் படித்ததாலஃது. சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும். பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில் ஊரே ருசிக்கும் காப்பி அருந்த அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன்….




Read more »

மெகாஃபோன் மாதவனும் கேரள சுந்தரமும்

By |

மெகாஃபோன் மாதவனும் கேரள சுந்தரமும்

From my book readied for Publication மன்னர் அரங்கில் மாபெரும் கூட்டம் வந்து சிறப்பிக்க வரவேற்கிறோம் நாளைக்கு மாலை ஏழு மணிக்கு தலைவர் பேசுவார் தவறாமல் வாருங்கள். எந்தக் கட்சி என்றாலும் கூட்டத்துக்கு வரச் சொல்லி அழைப்பது ஒருத்தர் மாதவன் என்ற மீட்டிங்காரன். மாணவன் போல வருடாவருடம் நூறு பக்கம் கோடுகள் போட்ட நோட்புக் சுப்பன் கடையில் வாங்கிக் கையில் சுமந்து திரிவான் மாதவன். எந்தக் கட்சிக் கூட்டம் என்றாலும் முதலில் சொல்வார் மாதவனைக் கூப்பிடு…




Read more »