Archive For The “பொது” Category

குரூரம் இல்லாம குசும்பு இல்லாம சொல்றேன் – வாழ்ந்து போங்கோ

By |

குரூரம் இல்லாம குசும்பு இல்லாம சொல்றேன் – வாழ்ந்து போங்கோ

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி இங்கே –   உடம்பிலே ரோகம் இருக்கும்போது கர்ப்பம் தாங்கினா உசிருக்கே அபாயமாகலாம்னு அந்த டாக்டர் தான் சொன்னாராம்.  கேட்டியா?   கேட்டேன்.   மனசே இல்லாம, கர்ப்பம் கலைக்கலாம்னாராம்.   ஆஹா. அவருக்கு, ரோகம் நிவர்த்தி பண்ண வந்த டாக்டருக்கு எதுக்கு மனசும் மத்தொண்ணும்?   அவரைத்தான் கேக்கணும். அவர் கலைச்சு விட தயார் தானாம். ஆனா அதுக்கு பொறுப்பான நபர்…




Read more »

வல்லிப்பெண் கர்ப்பம் தரித்தாள், தாங்க மாட்டாள்

By |

வல்லிப்பெண் கர்ப்பம் தரித்தாள், தாங்க மாட்டாள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து       அவர் தோளில் கை வைத்துப் பிடிச்சு நான் கேட்டேன் –   நீங்க அமிர்தவல்லியை வச்சிண்டிருக்கேளா?   இல்லை.   அப்போ நாலு நாள் முன்னாடி கோவில்லே உற்சவக் கொடி ஏத்தின அப்புறம், ஊர் வெளியிலே இருந்து ரெட்டைக் காளை வண்டியிலே அவளோட போனது யாரு?   நான் தான்.   நான் அழுதபடியே அவர் முகத்தில் அறைந்தேன்….




Read more »

அரசூர் சங்கரனை புகையுலை கடையில் சந்திக்க வந்தவள்

By |

அரசூர் சங்கரனை புகையுலை கடையில் சந்திக்க வந்தவள்

  வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நூல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி ஓதுவார் சொன்ன கதையை நானானா சுவாரசியமாக் கேட்டுண்டிருக்கேன். இந்தப் பொண்ணு சுகுணவல்லி என் மடியிலே படுத்து உறங்கியே போய்ட்டா. பாவம் சின்னப் பொண்ணு. அவ அம்மா மேலே விரோதம்னா அவ என்ன பண்ணுவா?   கதை முடிஞ்சு அவளை வீட்டுலே கொண்டு விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்தா,  என்னத்தைச் சொல்ல, வாசல் முறியிலே இவர்  குரிச்சி போட்டு, குரிச்சி…




Read more »

நீர் நன்னாயிரும் உம்ம குடும்பம் உறவெல்லாம் நன்னாயிருக்கட்டும்

By |

நீர் நன்னாயிரும் உம்ம குடும்பம் உறவெல்லாம் நன்னாயிருக்கட்டும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் இருந்து ஒரு சிறு பகுதி அதை விட இந்த கொழும்புக்காரி அமிர்தவல்லியோட பெரும்பாடு ரோகம் இன்னும் சிரமம். இனியும் கஷ்டம்.   இங்கே நம்மூர் நம்ம தெருக்கோடி பரமக்குடி வைத்தியர் பிரக்யாதி கொழும்பு வரைக்கும் பரவியிருக்காமே.  எப்போவாவது ஆத்துலே யாருக்காவது ஜுரம் வந்தா, இருமல் ஜலதோஷம் போதும்டா பகவானேன்னு அலுத்து வந்தா, அவருக்கு ரெண்டு நாளா கொல்லைக்குப் போகலேன்னா பரமக்குடி வைத்தியரை வரவழைச்சுடுவார். எங்க அம்பலப்புழையிலே பிஷாரடி வைத்தியர்…




Read more »

அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

By |

அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி கிட்டாண்ணா குரல்லே இந்த காளையார்கோவில் ஓதுவார் தேவாரம் பாடினது மனசுக்கு இதமா இருந்தது. இது சாமி சந்நிதியில் சாயரட்சை தீபாராதனை நேரத்துலே ஒரு அஞ்சு நிமிஷம் பாடறது இல்லே. பிரகாரத்திலே ஓரமா, நந்திக்குப் பக்கம் உட்கார்ந்து கையிலே சின்னதா தாளம் வச்சுத் தட்டியபடிக்கு மனசு விட்டுப் பாடறது.   நேத்து சாயரட்சை தீபாராதனை முடிஞ்சு, துணி விரிச்சு உட்கார்ந்து, கையிலே தாளம் தட்டிண்டு…




Read more »

நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

By |

நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல். அதிலிருந்து அடுத்த சிற்றஞ்சிறு மொழிச் சிதறல் – அவனைப் பாராட்டுகிற தொனியில், நல்லது நீ இப்போ தான் நல்ல பிள்ளை, காயத்ரி ஜபி என்றார் அவர்.   சார், எல்லா பெயரும் வாங்கிட்டேன். அகல்யா வயசு என்ன ?   பத்திரிகைக்காரன் குறுக்கே புகுந்து கேட்க, அப்புறம் என்று கை காட்டினார் புரோகிதர்.   இன்னும் அரை மணி நேரத்துலே எடுத்தாகணும்.  அவங்கவங்க குளிச்சுட்டு சாப்பிடணுமே, ஆபீஸ், ஸ்கூல்ன்னு…




Read more »