Archive For The “இது புதுசு” Category

ஏதோ ஒரு பக்கம்

By |

ஏதோ ஒரு பக்கம்

‘ஏதோ ஒரு ’. என் அல்-புனைவு கட்டுரைகளின் தொகுப்பு. என் மற்ற அல்-புனைவுகளோடு இதுவும் நூலாகிறது. புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே – ————————————————————————————————— ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் (சீரங்கத்துச் சிக்கலார் பாரி நாயனத்தை ஊதி முடித்துக் கிளம்பிப் போய்விட்டார். அந்த மேடை வெறுமையாகவே இருக்கும். ஜில்ஜில் ரமாமணி ஓரமாக ஆடலாம்) . பயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம்…




Read more »

எச்சமிடும் பறவைகளும் பூப்பந்தும்

By |

எச்சமிடும் பறவைகளும் பூப்பந்தும்

”பூப்பந்து (பாட்மிண்டன்) போட்டி நடத்த தில்லியில் சூழல் உகந்ததாக இல்லை. புகைமூட்டம் கவிந்த மைதானத்தில் பறவைகள் எச்சமிடுகின்றன.” – டென்மார்க் நாட்டு பூப்பந்து வீராங்கனை மியா ப்ளிச்பெல்ட் நான் தில்லியில் முப்பது வருடம் முன் வசித்தபோது குளிர் காலத்தை வருடாவருடம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். கிட்டத்தட்ட சுத்தமான காற்றும், பின்கழுத்திலும் செவிமடலிலும் இதமாகப் படிந்து குறுகுறுக்க வைத்து சதா கூட வரும் மெல்லிய மூடுபனியுமாக தில்லி சுவர்க்கமாகத் தெரிந்தது அப்போது. புகைமூட்டம் இல்லாத சூழல் அது. Smog பெரும்…




Read more »

தில்லிக்குக் குளிர் அழகு

By |

தில்லிக்குக் குளிர் அழகு

தில்லிக் குளிர்காலம் வாடைகளின் காலம் மூக்குச் செத்தால் சொர்க்கம் புலப்படாது முன்பே சொன்னேன் பின்னே வையாதீர். நவம்பர் தொடக்கம் முன்னிரவதனில் காற்று அடர்ந்து காதுகள் குறுகுறுக்க வரலாமா என்று குளிரொன்று கேட்கும். இந்த வருடம் பனிவிழும் என்பார் பண்டு எப்போதோ பார்க்கக் கிடைத்தவர் நினைவும் கனவும் இட்டுக் கலக்கிய பழைய காலம் பங்கு வைத்து தேநீர் பருகிக் கம்பளி தேடுவர். மூடுபனியாய் மெல்லப் பரவி ஆளில்லாத தெருக்களில் கவிந்து பார்வை மறைத்து காலை புலரும். பச்சுப் பச்சென்று…

Read more »

கமல்ஹாசன், ஜெயமோகன் மற்றும் இரா.முருகன்

By |

கமல்ஹாசன், ஜெயமோகன் மற்றும் இரா.முருகன்

முப்பட்டைக் கண்ணாடியின் உலகம் – இரா.முருகனின் புனைவுகள் அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருவிழாவில் வெளியிடப்பட்டநூல் இது. என் படைப்புகளைக் குறித்து மிக விரிவாக என் சக எழுத்தாள நண்பர்ப்களும்,, தேர்ந்த வாசகர்களும், விமர்சகர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. என்றும் கிளரொளி இளமை மின்னும் மூத்த ஆளுமைகளோடு talent to watch புத்திளைஞர்களும் பங்குபெறும் இலக்கிய ஆவணம். ஒவ்வொரு கட்டுரையாக வாசிக்க வாசிக்க உள்ளம் நெகிழ்ந்து போகிறது. நுண்மான் நுழைபுலம் கொண்டு என் நாவல்களை விமர்சனத்துக்கு…




Read more »

பகை வென்று பகை வென்று அகவி வந்த மயில்

By |

  லோதி ரோடு பக்கம் மைசூர் ஸ்கூல் காண்டீன்லே சுருக்கமா இட்லி, வடைன்னு முடிச்சுக்கலாமே. பத்து நிமிஷம் கூட ஆகாது.   கொஞ்சம் போல் ஊசிப் போன சட்னி தவிர காண்டீன் சாப்பாடு பரவாயில்லை தான். காப்பியை வேண்டாம் என்று சங்கரனுக்கு முன்னால் வசந்தி சொல்லி விட்டாள். அவள் போடுகிற காப்பிக்கு இணையில்லை என்ற திடமான நினைப்பு வசந்திக்கு. பிடார் ஜெயம்மா வேறே அவ்வப்போது வந்து, வசந்தி கையால் காப்பி சாப்பிட்டுத் தன் நன்மதிப்பு சர்ட்டிபிகேட்டை புதுப்பித்துத்…




Read more »

ஞாயிறு ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்ட முயலும் அண்டர் செக்ரட்ட ரி

By |

ஞாயிறு ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்ட முயலும் அண்டர் செக்ரட்ட ரி

வாழ்ந்து போதீரே – ==== ===================== இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட.   தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான்.   அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே உலகம். இப்போ, தில்லியிலே குளிர்காலம். ஞாயிற்றுக்கிழமை….




Read more »