Archive For செப்டம்பர் 19, 2010

படியேறி மூச்சிறைக்கப் பால்பாக்கெட் வைத்துத் தடுமாறிப் போகின்றாள் தாயி – நொடியில் அறையெங்கும் பாலாறு அக்கிழவி பாவம் குறையொன்றும் இல்லைகண் ணா (நடந்தபடி நகர்வெண்பா)
சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று ‘ரெட்டைத் தெரு’ குறும்பட வெளியீடு. பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் சென்னை வழக்கத்தை விட மற்ற ஊர் வளமுறை கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருப்பது வாடிக்கை. அது சில சமயம் ஓர் ஆசுவாசம் தரும். பல நேரங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். இந்த ‘சரி, செஞ்சுடலாம்’ ரிலாக்சேஷன் அரசுத் துறை அதிகாரிகளில் இருந்து ஆரம்பிக்கும். ஒரு பிற நகர் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஏழெட்டு வயசுப் பிள்ளைகள் அணி அணியாகப் பொரிவெய்யிலில் பழைய மரபெஞ்சுகளில் காத்திருந்தார்கள்….