Archive For அக்டோபர் 11, 2016

காலை வெய்யில் ஏற ஆரம்பித்தது. தியாகராஜ சாஸ்திரிகள் இன்னும் வந்து சேரவில்லை. இரண்டு இங்கிலீஷ் பத்திரிகைகளை ஆதி முதல் அந்தம் வரை எந்த சுவாரசியமும் இல்லாமல் தெரிசா படித்து முடித்திருந்தாள். இனியும் ஒரு முறை அவற்றைப் படிப்பதை விட தெருவில் ஒலிகளைக் கேட்டுக் கொண்டு, அபூர்வமாக விடுதி வளாகத்துக்குள் வரும் பழைய கார்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம். எங்கே போயிருப்பார்? ராத்திரி முழுக்கக் கண் விழித்திருந்ததாகச் சொன்னாரே, உடம்புக்கு ஏதாவது ஏடாகூடமாக ஆகியிருக்குமா? அவர் வருகிற சூசனையே…

ஆலப்புழையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி மதுரை சந்திப்புக்கு ரெண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது கொச்சு தெரிசாவுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாகப் போனது. சரியான நேரத்துக்கு அது வந்திருந்தால் நடுராத்திரி கழிந்து அதிகாலையாக இன்னும் நிறைய நேரம் பாக்கி இருக்கும் பின்னிரவு ரெண்டு மணிக்கு கொச்சு தெரிசா இங்கே ரயிலை விட்டிறங்கி இருப்பாள். மதுரை இருபத்து நாலு மணி நேரமும் கண் விழித்துப் பரபரப்பும் கலகலப்புமாக எப்போதுமிருக்கும் அபூர்வ நகரம் என்பதால் அவளுக்கு…

There indeed is something in the air. It is an ominous beginning to something else that I can always sense fairly accurate, even if it occurs a few kilometres away from where my current coordinates are. When it happens, my neurotic radar never fails me and beeps binary signals diligently to my cerebrum, putting me…

வாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பத்திநான்கு இரா.முருகன் வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து : குளிரும் மூடுபனியும் அடர்ந்து கனமாகப் படிந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாத முன்னிரவு நேரத்தில் குஞ்ஞம்மிணி வீராவாலியைச் சந்தித்தாள். காலம் நிலைத்த இடம். பழைய தில்லியின் சாலையொன்று சென்று தேய்ந்து மடங்கிக் குளிருக்கு இதமாக உள்வளைந்து சுருண்ட முடுக்குச் சந்து அது. இந்தப் பழைய பட்டணத்தில் எல்லோரும் ராச்சாப்பாட்டுக்காக உட்காரும் நேரம். கால தேச வர்த்தமானங்களுக்கு வெளியே ஜீவிக்கிறவள் என்றாலும் குஞ்ஞம்மிணிக்குப் புரிகிறது. முன்னெல்லாம்…

இப்படித்தான் திடுதிப்புனு வந்து நிப்பியா? திலீப் குரலில் போலி அதிகாரமும் அதன் பின்னே ஒரு குவளை சுண்டக் காய்ச்சிய பால் பாயச இனிமையும் தட்டுப்பட்டது. அகல்யாவை அங்கே பார்த்தபோது சம்பந்தமே இல்லாமல் ஓர் அழுகை தொண்டைக்குழியில் இருந்து புறப்பட, வாய் கோணக் குரல் கீச்சிட்டு அழச் சொன்னது மனசு. பின்னாலேயே இன்னொரு மனம் அதட்டி ஆண்மகன் அழுதல் நன்றன்று என்று கட்டுப் படுத்த வாயை இறுகப் பொத்திக் கொண்டு, விரைப்பாக வைத்த கைகள் மேலே உயர, அவசரமாகப்…

ஞாயிற்றுக்கிழமைக்கான சாவகாசத் தனத்தோடு ஊர்ந்து கொண்டிருந்தது ஆலப்புழை டவுண் பஸ். அம்பலப்புழையைத் தொட்டடுத்து ஏழெட்டு கிராமம். ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்படும் அது. அப்படிப் புறப்படாமல் அயோத்தி ராமன் வில் விட்ட அம்பு மாதிரி வலம் இடம் திரும்பாது நேரே போனால் வெறும் பதினைந்து நிமிஷத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் தான். ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு விரசாகப் போய்ச் சேருவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. திலீப் மட்டும் வித்தியாசமாக இருக்க நினைத்தால் நடக்குமா என்ன? ஊரோடு, யாரோ…