Archive For ஆகஸ்ட் 7, 2021

மிளகு – தமிழில் இதுவரை எழுதப்படாத வகை நாவல்

By |

மிளகு – தமிழில் இதுவரை எழுதப்படாத வகை நாவல்

மிளகு நாவல் சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 45 அத்தியாயங்கள் (கிட்டத்தட்ட 450 பக்கங்கள்) முதல் பிரதியாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் 40 அத்தியாயங்கள் synopsis எழுதி வைத்திருக்கிறேன். நாவலின் பரல்கள் (நான்கு அல்லது ஐந்து பத்தி)எந்த வரிசையிலுமின்றித் தினமும் முகநூலில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. நாவல் அத்தியாய வரிசையில் சொல்வனம் இணைய இலக்கிய பத்திரிகையில் தொடராக வெளிவரத் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு அத்தியாயங்கள் முழுமையாக இதுவரை வெளியாகியுள்ளன. மிளகு ஒரு சரித்திர நாவல். மிளகு time space continuum குறித்த…




Read more »

நிச்சலா மோதக்கின் சுகவீனமும் மர முக்காலியும் (நாவல் மிளகு)

By |

நிச்சலா மோதக்கின் சுகவீனமும் மர முக்காலியும் (நாவல் மிளகு)

அவருக்கு தன் மனைவியை வெளியே கூட்டிப் போகப் பிடிக்கும். ஆனால் நிச்சலாவுக்குத்தான் சிறு பிரச்சனை. பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நின்றாலோ நடந்தாலோ கால் துவள ஆரம்பித்து விடும். டாக்டர் பார்த்துவிட்டு இதற்கு உடம்பில் வலு இல்லாதது காரணம். வைடமின் டானிக் எடுத்துப் பாருங்கள் என்று காரணமும் தீர்வும் சொல்லி விட்டு அடுத்த பேஷண்டைக் கவனிக்க ஆரம்பித்தார். தினம்தினம் சிரமப்படுவது மோதக்கும் நிச்சலாவும் தான். மோதக் ரொம்ப யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு முக்காலியை தச்சரைக் கொண்டு…




Read more »

நாவல் மிளகு – குரல்கள், வாடை, காட்சிகள்

By |

நடுராத்திரிக்கு ஓ என்று சத்தம் போட்டுக்கொண்டு சின்னச் சங்கரன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருந்தார். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. குளிர்காலம் வந்து கொண்டிருக்கும் நவம்பர் மாதம் என்றாலும் வியர்வை உடலிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது. மாதம் ஒரு தடவையாவது திரும்ப வரும் கனவில் வெளி எல்லாம் மிளகு வாசம் அடிக்கும். அத்துவானக் காட்டிலிருந்து ஒரு குழந்தைக் குரல் நிறுத்தாமல் கூப்பிடும் – அப்பா அப்பா அப்பா. பின் அழும். ’சுப் ஷைத்தான் மத் ரோ கோலி தேங்கே’ என்று கனமான…




Read more »

மிளகு நாவல் – அம்பலப்புழை பால் பாயசத்துக்கு மராட்டியரின் ஆண்டு தோறுமான யாத்திரை

By |

மிளகு நாவல் – அம்பலப்புழை பால் பாயசத்துக்கு மராட்டியரின் ஆண்டு தோறுமான யாத்திரை

கஜானன் விநாயக் மோதக் வருடா வருடம் இல்லாவிட்டாலும் முகம் மறந்து போகாமல் வைத்திருக்கத் தக்க விதமாக, அவ்வப்போது அம்பலப்புழைக்கு வந்துவிடுவார். அம்பலப்புழை கிருஷ்ணன் கோவிலில் பிரசாதமாக அளிக்கப்படும் பால் பாயசத்துக்கு மிகப் பெரிய ரசிகரும் கூட, மோதக். நாற்பத்தைந்து வருடமாக ஒரு மராட்டிக்காரருக்கும் ஒரு மலையாள பூமித் தமிழருக்கும் இடையே நிலவும் நல்ல நட்பும் இணக்கமும் இவர்களில் ஒருத்தர் மறைவது வரை கண்டிப்பாக இதே நிலையில் தொடரும். மும்பாய் பம்பாயாக இருந்த 1960-களில் தொடங்கிய பரிச்சயம் அது….




Read more »

மிளகு நாவலில் எங்கோ ஓர் இடத்தில் இரண்டு தோழிகள் – சென்னபைரதேவியும் அப்பக்கா சௌதாவும் மகிழ்ந்திருப்பது

By |

மிளகு நாவலில் எங்கோ ஓர் இடத்தில் இரண்டு தோழிகள் – சென்னபைரதேவியும் அப்பக்கா சௌதாவும் மகிழ்ந்திருப்பது

போன தடவை வந்தபோது சிரித்து மாளவில்லை ரெண்டு பேருக்கும். ஒரு கவிராயன் தெலுங்கில் துளுவ ராஜ்யகுமாரி என்று அப்பக்காவை விளித்து நாட்டியமாடத் தோதாகப் பாட்டு எழுதிக்கொண்டு வந்து பாடியும், அடவு கற்பித்து நாலைந்து கன்யகையரைக் கொண்டு ஆடச் செய்தும் அப்பக்காவுக்கு பாட்டும் ஆட்டமும் காட்சி வைத்தான். அப்பக்கா மகாராணியே நீ உலகாளுகிறாய். உன் கேசம் மணம் வாய்ந்தது, மேகம் போல் இருண்டிருப்பது. உன் கண்கள் கரியவை. பெரியவை. உன் தனங்கள் மாம்பழங்கள் மிருதுவானவை. பெரியவை. உருண்டு திரண்டவை….




Read more »

மிளகு – நானூறு வயசு மூத்த மணப்பெண்ணும் நூற்றுப் பத்து வயது மணமகனும்

By |

மிளகு – நானூறு வயசு மூத்த மணப்பெண்ணும் நூற்றுப் பத்து வயது மணமகனும்

பற்றிப் படரும் மிளகு நாவலில் இருந்து – கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவிலுக்கு வெகு அருகே மஹா கணபதி ஆலயத்தில் ரோகிணியை பரமன் திருமணம் செய்துகொண்டார். ரோகிணி இந்திய போர்த்துகீஸ் கலப்பினப் பெண். பரமனை விட நானூறு வயது மூத்தவள். ஊமத்தை யுத்தத்தில் முழு போர்த்துகீஸ் இனத்தவனான அண்டோனியோ சகாரியோவான தன் முதல் கணவனை இழந்தவள். அதற்கு அப்புறம் முழுக்க இந்திய வம்சாவளியினளாகத்தான் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறாள். லிஸ்பனில் வீடு, தோட்டம், உறவுக்காரர்கள் என்று இருந்தாலும் உத்தர…




Read more »