Archive For ஜனவரி 11, 2022
A longish extract from my forthcoming novel MiLAGU எந்தக் குதிரை வேண்டும்? என்னிடம் குதிரை பராமரிப்பு ஊழியர் கேட்டார். இல்லை, நடந்தும் ஓடியும் யுத்தம் புரியும் காலாட்படை வீரன் நான் என்றேன். குதிரை ஏறத் தெரிந்த சிப்பாய்களில் நூறு பேரை குதிரைவீரர் ஆக்கியிருக்கிறார்களாம். அவர்களில் நானும் ஒருவனாம். குதிரை ஏற்றம் தெரியும் என்று அரசவை உத்தியோகத்தில் வரும்போதே அறிவித்து விட்டு வந்திருக்கக் கூடாது என்று இப்போது தோன்றியது. என்னைப் போலவே சாதுவான ஒரு குதிரை,…

டாக்டர் பாஸ்கரன் நூல் முன்னுரை ஆதியில் ஒலி இருந்தது. அது எண்ணத்தை வெளியிட வார்த்தைகளாகப் பிறப்பெடுத்தது. நினைத்ததை முழுக்க வெளிப்படுத்த சொல் மட்டும் போதாது என்ற நிலை வந்தபோது சைகைகளும், ஆட்டமும், பாட்டும் சொல்லை மிகுத்து உயிர்த்து வந்தன. வார்த்தை காதுகளின் வெளியைக் கடந்து போகும்போது புரிதலும், நினைவு கூரலும் ஆளாளுக்கு மாறுபட, ஒரே என்ணத்தின் கணக்கற்ற பிரதிகளாகச் சொல் விரிந்தது. சொல்ல வந்ததில் பகுதி மட்டும் சொல்லப்பட்டு, அதுவும் ஆதி வார்த்தைக்கு வேறுபட்டு வந்து சேர,…

An excerpt from my forthcoming novel ‘MILAGU’ ஒன்றுக்கு இரண்டாக இட்டலித் துணியை அவனிடம் வாங்கிக்கொண்டு வந்தேன். அவற்றில் ஒன்றை இடுப்பில் முடிந்து கொண்டு மற்றதை கால் காயத்தின் மேல் இறுக்கக் கட்டினேன். கூடார ஓரத்தில் கத்தி, அதுதான் சொன்னேனே, ஒவ்வொருத்தருக்கும் வாள் ஒன்று எடுத்துக் கொடுத்து ஜயவிஜயிபவா சொல்லி அனுப்புகிறார்கள். சாயந்திரம் மறந்து விடாமல் கொடுக்கவும் என்று நேமிநாதரின் உத்தியோகஸ்தன் சொல்லும்போது சிரித்தேன். வாங்கிய வாளை வீசிப் பார்த்தேன். அந்த வாள் வைத்த இடத்துக்கு…
அந்திமழை ஜனவரி 2022 இதழில் பிரசுரமானது நாவலுக்குப் பின்னால் – அரசூர் வம்சம் இரா.முருகன் எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியப் பத்திரிகைகளில் புதுக் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் எண்பதுகளின் இறுதியில் வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதை எழுதத் தொடங்கியதற்கு தில்லியில் இருந்து சென்னைக்கு உத்தியோக மாற்றலாகி வந்ததுதான் முக்கியக் காரணம். தில்லியைப் போல் வார இறுதியில் கூடி இருந்து பியர் குடிக்க முடியாத சென்னையில் அப்போது ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திர பொழுது போக்கு, அரசாங்க சானலில் வந்த…

An excerpt from my forthcoming novel MILAGU எனக்கு அவசர அவசரமாகக் காலில் கட்டுப் போட்டு விட்டு மருத்துவச் செக்கன் என்னமோ அவனை தனியாக வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தமாதிரி விழுந்தடித்துக்கொண்டு ஓடினது மட்டுமில்லாமல் நீயும் வா என்று என்னையும் நிர்பந்தித்தான். ஐந்து நிமிடம் முன்னால் தான் ஆழப் பதிந்த கத்தி கிழித்து ரத்தம் பெருகிய காலை எடுத்து வைத்து நான் எப்படி ஓடுவது? நடக்கிறது நடக்கட்டும் என்று நான் பொட்டலுக்குப் போகாமல் கூடாரத்திலேயே ஒரு…

மிளகு நாவலில் இருந்து இரு சிறு பகுதிகள் சென்னா ஒற்றர் அணி கொண்டுவந்த தகவலை முன்பைவிட நிதானமாக அறிவித்தாள். ஆச்சர்யம் விலகாமல் கையிரண்டையும் உயர்த்தி, இது அதிசயமானது என்று பொருள் தர பெத்ரோ நின்று நடனக் கலைஞன் போல் அபிநயிக்க, சென்னபைரதேவி இருந்தபடியே குறுநகையோடு, அதேபோல் அபிநயித்தாள். அவளுடைய ஊன்றுகோல் தரையில் ஓசையெழுப்பி விழுந்தது. பெத்ரோ அமர்ந்து சொன்னார் – சரி அம்மா! நான் உங்கள் அனுமதியோடு கோழிக்கோடு செல்லப் போகிறேன். அங்கிருந்து என்னை இயங்கச் சொல்லி…