Archive For நவம்பர் 29, 2024
லோதி ரோடு பக்கம் மைசூர் ஸ்கூல் காண்டீன்லே சுருக்கமா இட்லி, வடைன்னு முடிச்சுக்கலாமே. பத்து நிமிஷம் கூட ஆகாது. கொஞ்சம் போல் ஊசிப் போன சட்னி தவிர காண்டீன் சாப்பாடு பரவாயில்லை தான். காப்பியை வேண்டாம் என்று சங்கரனுக்கு முன்னால் வசந்தி சொல்லி விட்டாள். அவள் போடுகிற காப்பிக்கு இணையில்லை என்ற திடமான நினைப்பு வசந்திக்கு. பிடார் ஜெயம்மா வேறே அவ்வப்போது வந்து, வசந்தி கையால் காப்பி சாப்பிட்டுத் தன் நன்மதிப்பு சர்ட்டிபிகேட்டை புதுப்பித்துத்…

வாழ்ந்து போதீரே – ==== ===================== இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட. தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான். அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே உலகம். இப்போ, தில்லியிலே குளிர்காலம். ஞாயிற்றுக்கிழமை….

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட. தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான். அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே…

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது – சிறு பகுதி நாக்பூர் சித்தப்பா வந்திருக்கார். அப்பா கூட்டிண்டு வந்தார். அவரோட பக்கத்து, எதிர் குடித்தன மாமாஸ் வேறே. எல்லோரும் ஹால்லே குழந்தையோட விளையாடிண்டிருக்கா. நல்லதாப் போச்சு. இதை எல்லாம் உத்தேசிச்சுத் தான் சொன்னேன். என்னன்னு? நம்ம விளையாட்டை இந்த நிமிஷமே, விட்ட இடத்துலே தொடரலாம்னேன். ஆமாமா, அதுக்குத் தானே எழுப்பியானது. அவன் முகத்தை இரு கையாலும்…

வாழ்ந்து போதீரே (அரசூர் வம்சம் நாவல் தொகுதியில் நான்காவது நூல்) நாவலில் இருந்து – இவளை ஏமாற்றியாகி விட்டது. இந்தக் குழந்தையையும் தான். சங்கரனுக்குத் தோன்றியது. ஒரு நல்ல புருஷனாக, ஒரு தங்கமான அப்பாவாக, இதுதான், இவர்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம் என்று தாங்கி முன் நடத்திப் போகிறது தானே சங்கரனுக்கு விதிக்கப்பட்டது? இதில் கொச்சு தெரிசா எங்கே வந்தாள்? அவளோடு எப்படி சுகித்திருக்கப் போனது? ஒரு வாரப் பழக்கத்தில் உடம்பு கலக்கிற…

இந்தச் சிறு பகுதி ‘வாழ்ந்து போதீரே’ என்னும் நான்காவது அரசூர் நாவலில் வருவது – சங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து உறங்கும் பொழுது அது. குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து…