Archive For பிப்ரவரி 22, 2018

புது நாவல் : 1975 :காண்டேகர் மட்டும் பார்த்திருந்தால் ஏன் உயிரை விட்டோம் என்று அவரும் காசியாப்பிள்ளையோடு கூடச் சேர்ந்து ஒரு பாட்டம் அழுதிருப்பார்

By |

யாராவது எங்கேயாவது சமீபத்தில் இறந்திருந்தால் அவர்களுக்கான துக்கதினம் என்று எளிய லாஜிக் இதன் பின்னணியில் உண்டு. ஆகஸ்டில் பின்னணிப் பாடகர் முகேஷ் இறந்ததற்காகத் துக்கம் அனுஷ்டித்தார்கள். செப்டம்பரில், மராத்திய எழுத்தாளரும், தமிழ் மொழிபெயர்ப்பில் பிரபலமானவருமான வி.எஸ்,கண்டேகர் மறைவுக்கு அடுத்த துக்கம் காத்தார்கள். இதெல்லாம் ஒரு சாக்கு தான் என்றும் அவர்கள் துக்கம் கொண்டாடியது இன்னும் எங்கும் நிறைந்து நிற்கும் எமர்ஜென்சி படுகொலை செய்த ஜனநாயகத்துக்குத்தான் என்றும் அவர்கள் அவ்வப்போது அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு காதில் கிசுகிசுப்பார்கள். காண்டேகர்…




Read more »

புது நாவல் : 1975 : உங்களுக்கு 20 அம்சம். எனக்கு மூணு தான். பிதா,சுதன்,பரிசுத்த ஆவி

By |

இடைக்காட்டத்தூர் சர்ச் ரோஜாப்பூ வாசனையில் அமிழ்ந்திருந்தது. சாமந்திப் பூ தூவிய பாதை சர்ச்சுக்குள் பிரார்த்தனை மேடை வரை அழகாகக் கோலம் போட்டு வைத்திருந்தார்கள். பாருக்குட்டி வேலை அது என்று சொல்லாமலேயே புரிந்துகொண்டோம். அவளுக்கும் அவள் அச்சனுக்கும் நோட்டீஸ் வைக்க காந்தி வாத்தியார் மறக்கவில்லை தான். சர்ச் நிறைந்து இருந்தது. மணவாளனின் நண்பர்கள் என்ற தகுதியில் எங்கள் குழுவுக்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு உட்கார சர்ச்க்குள் பிரார்த்தனைக் கூடத்தை ஒட்டி, நடைபாதையோடு சேர்த்து இடம் ஏற்படுத்தி இருந்தார்கள். அங்கே…




Read more »

புதிய சிறுகதை : இசக்கி

By |

இசக்கி என்பது ஒரு பெண்பெயர். இருபத்தைந்து வயதான, நல்ல உயரமான, களையான, கருத்துத் திரண்ட அந்தப் பெண் எங்கள் கம்ப்யூட்டர் கம்பெனி நான்காம் மாடியில் தனியார் நடத்தும் கேண்டீனில் காப்பி கலந்து தருகிறாள். ஆம்லெட் போடுகிறாள். தோசை சுடுகிறாள். போன வருடம் மிரள மிரள விழித்துக் கொண்டு வேலைக்கு வந்தவள் இசக்கி. ‘காப்பி கலக்கத் தெரியாதா?’ என்று சுதந்திரநாதன் வீராஸ் கேட்டார் அவளை. ‘காப்பி தெரியும், மிஷின் தான் தெரியாது’ என்றாள் இசக்கி. அது சமையலுக்கு வைத்திருந்த…




Read more »

புது நாவல் : 1975:ஜனாதிபதி பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டார். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடனம்.

By |

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் ஒரு சிறு பகுதி ———————————————————— ‘இன்னிக்கு கவர்மெண்டே இல்லாத நிலைமை சார். மிலிட்டரி டேக் ஓவர் செஞ்சா கூட ஆச்சரியப்பட மாட்டேன்”. சீனிவாசன் அரசியல் பேசிக் கேட்பது இதுதான் முதல் தடவை. ஆபீஸ் விஷயம் பற்றி இல்லாமல் மற்றதைப் பேசிக் கேட்பதும் முதல் முறைதான். லஞ்ச் டேபிளில் சீனிவாசனிடம் நான் கேட்டேன், “சார், காலையிலே கிருஷ்ண அய்யர் பத்தி சொல்லிட்டிருந்தீங்களே, பிரதமரை ஹைகோர்ட் பதவி நீக்கம் செய்திருக்குன்னு, அதாலே நமக்கு என்ன…




Read more »

புது நாவல் : 1975: ”பத்தே நாள்லே நாடே நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாமல் மாறிடுத்து”

By |

இன்று எழுதியதிலிருந்து, நாவலின் சிறிய பகுதி – 1975 ஜூன் 25, 26 நினைவுகள் பிரான்சிஸ் தங்கராஜ்னு பெயரைச் சொன்னதும் கொஞ்சம் நிலை குலைஞ்சு போயிட்டார்னா பார்த்துக்க போத்தி. சரி, ஏதோ விவகாரமான பயதான்னு நினைச்சிருக்கணும். ஆர்.சியா ப்ராட்டஸ்டண்டான்னு அடுத்த கேள்வி. சிவப்பழமா கழுத்திலே கொட்டை கட்டி, நெத்தியிலே பட்டை அடிச்சு உட்கார்ந்து கல்லாவிலே காசை வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கிற அவருக்கு ரோமன் கத்தோலிகனா, புராட்டஸ்டண்டா அப்படி ரெண்டு பிரிவு இருக்குன்னே தெரிஞ்சிருக்க நியாயமில்லே. ஆனா நான் யாருன்னு…




Read more »

புது நாவல் : 1975 : கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும்

By |

இன்றைக்கு எழுதிய அத்தியாயத்திலிருந்து அவருடைய ஜில்பாத் தலைக்கும், மீசை இல்லாத அப்பாவி முகத்துக்கும் ரொம்பவே வித்யாசமான, விஷயம் தெரிந்த பேர்வழியாக இருந்தார் அவர். மேனேஜரும் சட்டென்று விஷயத்துக்கு வந்துவிட்டார். “அது ஒண்ணும் கயிட்டம் இல்லீங்க. நம்ம பசங்க கச்சிதமா செஞ்சு கொடுத்திடுவாங்க. கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும். டூயட் நாங்க பாடினா இருநூறு. வேறே யாராச்சும் பாடி வாய் அசைக்கணும்னா நூத்தம்பது. உங்க பட்ஜெட் என்ன?” போகிற போக்கில் ஒவ்வொரு வரி வசனம்…




Read more »